யானை தந்தம் திருடுக்கு வன அதிகாரி தயவு!

யானை தந்தம் திருடுக்கு வன அதிகாரி தயவு!

 ஜானி,

 யானைகளை கொன்று வியாபாரத்துக்காக அதன் தந்தங்களை திருடி விற்கும் கும்பலுடன் வன அலுவலர் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

 கோவை மாவட்ட  வனத் துறையில் உள்ள வன அலுவர்கள்கள் சிலர்  சமூக விரோதிகளிடம் தொடர்பு வைத்து சட்டவிரோதமான யானை தந்தம் கடத்தல் வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.

  அரசல் புரலாக எழும் இது போன்ற குற்றச்சாட்டுகளினால் பணியிடைமாற்றம் செய்யப்படும் அலுவலர்கள் எதையோ விரையம் செய்து மீண்டும் அதே இடத்திற்கு பணிக்கு திரும்பிவிடுகிறார்கள்.

 ஒரு சிலர் பணி உயர்வு பெற்றும் திரும்புகிறார்கள்.

 கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப் சிலிப் செல்லும் வழியில் மீன்கரை சாலையில் அமைந்துள்ள உலந்தியில் வன வரவேற்பு அறையில் வன காப்பாளராக இருந்த நபர், டாப்ஸ்லிப் செல்லும் சட்டவிரோத நபர்களிடம் பழக்கம் வைத்துக் கொண்டு உயர்ரக மரங்களை கடத்த உதவி புரிந்துள்ளார்.

  அவர் ஆனைமலை சரக வனத்துறை அதிகாரியாக பணியாற்றிய போது இரண்டு யானை தந்தங்கள் காணாமல் போனதை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 அப்போது லஞ்ச ஊழலில் ஈடுபட்டிருந்த அந்த குறிப்பிட்ட அலுவலர் யானைத் தந்தம் திருடும் கும்பலிடம் சவகாசம் வைத்திருப்பார் என சந்தேகிக்கப்பட்டது.

  கேரளா மன்னார்க்காடு சந்தனம் மரம் கடத்தல் சலீம் என்பவருக்கு உடந்தையாக இருந்து இரண்டு யானை தந்தங்களை கடத்தி இருப்பார் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

 இது பற்றி வன ஆர்வலர்கள் பலர் வனத் துறை உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததின் பெயரில் இவர்மீது துறை ரீதியான விசாரணை நடந்து கொண்டிருந்த போது யானை தந்தம் திடீரென்று கிடைத்துவிட்டது.

 அதன்பேரில் அவர் காங்கேய வனத்துறை அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 சில மாதங்களே அங்கு பணியாற்றிய அந்த தில்லாலங்கடி ஆபிசர் மறுபடியும் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் உலந்தி வனசரக அதிகாரியாக மாறுதலாகி வந்துள்ளதாக தகவல்.

 இவர் தங்கும் விடுதிகளுக்கான ஆன் லைன் புக்கிங்கில் முறைகேடு செய்வதில் பலே கில்லாடி என்கின்றனர் அந்த பகுதியில் உள்ளவர்கள்.

 டாப்ஸ்லிப் தங்கும் விடுதிக்கு  செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்தால் எப்போதுமே புக்கிங் ஃபுல் என்று காண்பிக்கும் .

அதற்கு காரணம் மேற்படி அதிகாரிதானாம்.

   அவருக்கு தெரிந்த 20 நபர்களின் பெயரில் புக்கிங் செய்து வைத்து வசதியுள்ளவர்கள் சுற்றுலாவுக்கு வரும் போது ஆன்லைன் புக்கிங் செய்தவர்கள் வரவில்லை என்று கேன்சல் செய்து இவர்களுக்கு ரசீது போட்டு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்று வருகிறார்.

  அதுமட்டுமில்லாமல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றி உள்ள மர அறுவை மில்களில் மாமுல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல்.

சிசிஎப் லெவல் வன அலுவலரின் பார்வைக்கு இது பற்றி சென்றால் மட்டுமே விடிவு கிட்டும்.