காதல் சீட்டிங்... காவலர் மீது பெண் புகார்!

ஜி.பாலகுரு,
கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மூன்று ஆண்டு ஜல்சா செய்து வந்த காவலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவரது தந்தை சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர்.
சதீஷ் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஒரு பெண்ணிடம் 3 ஆண்டுகளாக பழகி ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
ஆனால் கல்யாண பேச்சை எடுத்தாலே சதீஷ் அந்த பெண்ணை அலட்சியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சதீஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக மேற்படி பெண் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவலர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.