பெரியார் பல்கலை பதிவாளர் பலான புகாரில் கைது!

பெரியார் பல்கலை பதிவாளர் பலான புகாரில் கைது!

எஸ்.முனியசாமி,

 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், அங்கு பொறுப்பு பதிவாளர் மீது அளித்த பாலியல் புகாரில்,கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

   சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் கோபி (50), என்பவர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அவர், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில்,  விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

  மாணவியின் புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.