கொலை செய்த பெண் மீது குண்டர் சட்டம்!

கொலை செய்த பெண் மீது குண்டர் சட்டம்!

  கு.அசோக்,

அரக்கோணம்  பகுதியில் கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண் மற்றும்  இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்,பி மற்றும் கலெக்டர் உத்தரவு.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் நிலையத்துக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சேர்ந்த செல்வானந்தம் என்பவரின் மனைவி தேன்மொழி -51 என்ற பெண்மணி மீது அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   அதேபோன்று  அரக்கோணம் பகுதியில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதிகள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் சந்திரன்-40 அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் தரணி(எ) தினேஷ்-25 ஆகிய இருவர் மீது கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  மேலும் இந்த மூன்று பேர்  கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளுக்கு குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் பரிந்துரை பேரிலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி இந்த மூவரையும் வேலூர் மத்திய சிறையில் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.