பாழடைந்த வீட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல்!

பாழடைந்த வீட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல்!

 கு.அசோக்,

வாணியம்பாடியில் நீண்ட நாட்களாக  பூட்டிய வீடுகளில் போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் பாழடைந்த வீட்டில் 15 மூட்டைகளில் மற்றும் லாரி டியுப்களில் பதுக்கி வைத்திருந்த கள்ள சாராயம், 2 பேரல்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல்.

 திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி நேதாஜி நகர்,காமராஜர் நகர்,லாலா ஏரி உள்ளிட்ட இடங்களில் கள்ள சாராயம் அதிகமாக விற்பனைசெய்யப்பட்டு வருவதாக  பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

 மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 30 மூட்டைகளில் பாதுக்கி வைக்கபட்டிருந்த கள்ள சாராயத்தை  பொதுமக்களே பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

 பொதுமக்களின் புகாரின் பேரில்  வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கள்ள சாராய கும்பலை சேர்ந்த  18 பேரை கைது செய்துள்ளனர்.

 மேலும் அப்பகுதியில் கள்ள சாராய விற்பனையை முழுவதும் ஒழிக்கவும்,  கள்ள சாராய கும்பலை சேர்ந்த கும்பலை பிடிக்க  டி.எஸ்.பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான 20 பேர் கொண்ட போலிசார் குழு நேதாஜி நகர்,லாலா ஏரி,இந்திரா நகர் பகுதியில்  நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீடுகளை சோதனை செய்தனர்.

 அப்போது பவுணம்மாள் என்பவருக்கு சொந்தமான நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த பாழடைந்த  வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 மூட்டைகளில்  மற்றும் 2 லாரி டியுப்களில் பதுக்கி வைத்திருந்த கள்ள சாராய பாக்கெட்டுகள், 2 பேரல்கள் , ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் இதில் முக்கிய குற்றவாளி மகேஷ்வரி அவருடைய கணவர் சீனிவாசன்  உட்பட மேலும் 10 பேரை பிடிக்க வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையில்  4 தனிப்படை அமைத்து  கள்ள சாராய கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.