மோட்டார் பைக்கில் வந்து சென்ற ஆயுதம் ஏந்திய நபர்கள்:- இலங்கையில் பீதி!!

மோட்டார் பைக்கில் வந்து சென்ற ஆயுதம் ஏந்திய நபர்கள்:- இலங்கையில் பீதி!!

B.G.R.,

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய பகுதியில், முகத்தை மறைத்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், மோட்டார் பைக்கில் வந்து சென்றது அங்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்றைய தினம் நாடாளுமன்ற கூட்டம் நடந்த நிலையில் அங்குள்ள நுழைவாயில் அருகே போராட்டங்கள் நடந்தது.

அந்தப் பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

அப்பொழுது அந்த பகுதிக்குள் திடீரென நான்கு மோட்டார் பைக்குகளில் வந்தனர்.

ஆயுதம் ஏந்தி, முகங்களை முகக்கவசத்தினால் மூடியவாறு 4 மோட்டார் சைக்கிள்கள் போராட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு வந்ததால் அங்கு பீதி ஏற்பட்டது. 

 அவர்களை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்து விசாரிக்க முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அலட்சியமாக இருந்தனர்.

 மேற்கண்ட நான்கு பேர் அடங்கிய ராணுவ ரைடர்ஸ் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 அப்பொழுது, ஒழுக்கமற்ற விதத்தில் போலீஸ் அதிகாரிகள் செயற்பட்டதாகவும், அவ்வாறு செயற்பட்ட 2 போலீஸ் அலுவலர்கள் மீது  விசாரணைகளை நடத்துமாறும் ராணுவத் தளபதி, போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்திற்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து போலீஸ் உயர் அதிகாரியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.