பல்லை இளிக்கும் ஸ்மார்ட் சிட்டி சாலைகள்! லாரி சக்கரம் பள்ளத்தில் புதைந்த பரிதாபம்!

G.K.SEKARAN,

 வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி சத்துவாச்சாரி.

 இங்குதான் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன.

 மேலும், பள்ளிக்கூடங்கள், வீட்டுவசதி வாரிய அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் என பரபரப்பாக உள்ள பகுதியாகும்.

 விவிஐபிக்கள் ஏராளமானோர் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது.

 அப்படியிருக்க, வேலூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இணைத்து அதற்கென மத்திய அரசு நிதியளித்துள்ளது.

 அதில் சத்துவாச்சாரி பகுதியை முன்மாதிரியான நகரமாக்கி காட்ட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அலுவலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப பலகோடிகளை கொட்டி செலவு செய்ததாக கணக்கும் காட்டுகிறார்கள்.அவர்கள் கிழித்த பணிகளினால் ஐநூறுக்கும் மேற்பட்ட பழைய மரங்கள் வேரோடு தோண்டி அழிக்கப்பட்டது.

  இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் வட்டார போக்குவரத்து சாலைக்கு (ஆர்.டி.ஓ) ஜல்லி போட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

  அப்படியிருக்க மேற்படி ஆர்.டி.ஓ. சாலையில் இன்று செங்கல் ஏற்றிச் சென்ற மினி லாரி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

  இதனால், அங்கு தரமற்ற முறையினால் சாலை அமைக்கப்பட்டது நிரூபனமானது.

 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கூறியுள்ளார் என்கிற நிலையில், மேற்படி தரமற்ற முறையில் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று சத்துவாச்சாரி வாசிகள் கேட்கிறார்கள்.

 அதே போல் சத்துவாச்சாரி பகுதி இரண்டில் போஸ்ட் ஆபிஸ்க்கு பின்னால் உள்ள 59 வது வீதியில் குழாய் உடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகிறது, அது குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

 அதேபோல் மாநகராட்சி மண்டல அலுவலகம் இரண்டின் வெளியில் உள்பட பல வீதிகளில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.

 அதையும் மணடல அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை, இப்படியே போனால் என்ன ஆவது என்று பலரும் விணா எழுப்புகிறார்கள்.

பாவம் அவர்களுக்கு பதில் சொல்லத்தான் எவரும் இல்லை.