கஞ்சா தோட்டத்தை அழித்த திருப்பத்தூர் டிஎஸ்பி அண்ட் டீம்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அழித்தனர். ஒருவர் கைது தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை கல்லாவூர் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். இவரது நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் துரைராஜ் ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவுடன் ஜவ்வாது மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட்டனர்.
அப்போது, கல்லாவூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.கஞ்சா செடிகள் வளர்த்து வந்த செல்வராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவாக உள்ள குப்பன் என்பவரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு போதை வஸ்துக்கள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் துரித நடவடிக்கை எடுத்து வந்ததைத் தொடர்ந்து ஜவ்வாது மலையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைதானது குறிப்பிடத்தக்கது.