கொள்ளையன் காலை உடைத்த பொதுமக்கள்!

கொள்ளையன் காலை உடைத்த பொதுமக்கள்!

கு.அசோக்,

 ஐந்து சவரன் தங்க நகை மற்றும் 1. 5 லட்சம் பணம் கொள்ளை - கொள்ளையன் காலை உடைத்த பொதுமக்கள்

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியை சார்ந்த புல்லார்கவுண்டர் மகன் வெங்கடேசன்,இவர் கோயம்புத்தூரில் பானிபூரி கடை நடத்திவருகிறார்.

   இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரமேஷ் மற்றும் இவருடைய நண்பர்கள் இரண்டுபேர் சேர்ந்து வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மட்டும் ஒன்றரை லட்சம் பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.   

  பின்னர் அதே பகுதில் பக்கத்து வீடான  ஸ்ரீரங்கம் என்பவரின் இவருடைய மகன்கள் சென்னையில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறனர். ஆகவே ஸ்ரீரங்கம் தனியாகத்தான் வசித்து வருகிறார்.

  இந்நிலையில்  வெங்கடேசன் வீட்டில் கொள்ளையர்கள் திருடிய கையோடு, ஸ்ரீரங்கம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர்.

  அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி திருடர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது ரமேஷ் என்பவர்ன் மட்டும் சிக்கினான்.

  அவனை பிடித்த பொதுமக்கள் அவனது காலை உடைத்துள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடி விட்டனர்.பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் பொது மக்களிடம் கொள்ளையனை மீட்டு திருப்பத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்