178 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1,15,000/- மதிப்புள்ள 178 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 5 பேர் கைது - புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் அவர்கள் மேற்பார்வையில் ரைடு நடத்தினர்.
அதற்கென முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை தலைமையில், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், காவலர்கள் திருமணிராஜன், செந்தில்குமார் மற்றும் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் அய்யன்குளம் தெருவில் சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் வாகனத்தில் இருந்த 1) சக்திவேல் (42), த/பெ. பிச்சையா, அய்யன் கோவில் தெரு, முத்தையாபுரம், கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்களான 2) ஜெயபாண்டி (24) த/பெ. சரவணன், 3) அவரது சகோதரரான ஜெயபாரத் (21), 4) சதீஷ் (24), த/பெ. ராஜீவ், யஸ்வந்த்புரம், பெங்களூர் மற்றும் 5) சிவசங்கர் (20), த/பெ. பழனி, மேற்கு தென்னூர், திருப்பத்தூர் ஆகிய 5 பேரும் சேர்ந்து உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 5 பேரையும் கைது செய்தனர்.
ரூபாய் 1,15,000/- மதிப்பிலான 178 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த எதிரிகளை கைது செய்து சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.