டேய் அடங்கமாட்டீங்களாடா?

டேய் அடங்கமாட்டீங்களாடா?

கு.அசோக்,

 இரண்டரை டன் ரேஷன் அரிசியை டாட்டா ஏசி வாகனம் மூலம் கடத்திய  நான்கு நபர்கள்  கைது ஆற்காடு நகர காவல்துறை நடவடிக்கை.

 இராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு கணபதி நகர் அருகே ஆற்காடு நகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகிக்கும் விதமாக அதிவேகமாக வந்த டாட்டா ஏஸ்  வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

  அதை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் டாட்டா ஏஸ்  வாகனத்தில் தமிழக அரசால் குடும்ப அட்டைகளுக்கு வழங்கக்கூடிய இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து கடத்தி வரப்பட்ட இரண்டரை டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ்  வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

  மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஆற்காடு வேல்முருகன் தெருவைச் சேர்ந்த சதீஷ்(29) மருதுபாண்டியன்(33) வினோத்(39) பிரேம்நாத்(44) ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆற்காடு நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.