கிராமத்தையே ஆட்டையை போட்ட திமுக பிரமுகர்.! திருவண்ணாமலை திகு திகு!

கிராமத்தையே ஆட்டையை போட்ட திமுக பிரமுகர்.! திருவண்ணாமலை திகு திகு!

 ச.பாண்டி,

 திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், தி.மு.க ஒன்றிய துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர், வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேரின் நிலங்களை போலி பட்டா மூலம் தனது பெயருக்கு மாற்றி  மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்.

  எனவே நிலங்களை பறிகொடுத்தவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தாலுக்கா அலுவலகதின் வாசலில் அமர்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

 தி.மு.க நிர்வாகி மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு வாதம் செய்தனர்.

 இது குறித்து நில உரிமையாளர்களிஒல் ஒருவர் தெரிவிக்கையில் வட்டாட்சியரிடம் முறையிட்டு நியாயம் கேட்டோம். என்னங்க செய்யறது ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்வதால் என்னால் இப்போதைக்கு ஒன்றும்செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.

 மேலும் வி.ஏ.ஓ.குப்புசாமி, ஆர்.ஐ.சரவணன் மற்றும் துணை வட்டாட்சியர் கலையரசி போன்ற வருவாய் அலுவலர்கள் நில மோசடி மன்னனுக்கு சப்போர்ட் செய்கிறார்கள்.

  இப்படியே போனால் அந்த நில மோசடிக்காரன் வட்டாட்சியர் அலுவலகத்தையும், ஏன்? ஆட்சியர் அலுவலகத்தையும் ஆட்டையை போடுவார் அப்போ கூட அமைதியாக இருப்பார்களா இவர்கள் என்கிறார்.