ஒற்றையானையின் வருகை!மக்கள் கலக்கம்!!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே மலைச்சாலையில் யானை நடமாட்டம் சாலை குறுக்கே ஒற்றையானை உள்ளதால் கிராமத்தில் இருந்து வெளியேற முடியாமல் மலைகிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் மலைச்சாலையில் ஒற்றையானை சாலையின் குறுக்கே நின்று கொண்டுள்ளதால் மலைகிராம மக்கள் பணிக்கு செல்வதற்காக ஆம்பூர் வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் உடனடியாக குழுக்கள் அமைத்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் மலை வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்கு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானை வராதவாறு பெரிய பள்ளங்கள் தோன்றி கண்காணிக்க வேண்டும் எனவும் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையிலான வனத்துறையினர் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.