சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் அலுவலர்கள் ஆய்வோ ஆய்வு!

ஜி.கே.சேகரன்,
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சுமார் 11 ஆயிரம் பேருக்கு 7 இடங்களில் இரண்டாம் கட்டமாக தேர்தல் பயிற்சி முகாம் தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு நடத்தினர்.
வேலூர்மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் வேலூர் கணியம்பாடி அனைக்கட்டு பேர்ணாம்பட்டு குடியாத்தம் கேவிக்குப்பம்,காட்பாடி ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1331 வாக்குசாவடிகளில் வாக்குபதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தலில் ஈடுபடவுள்ளனர்.
இந்த தேர்தலில் ஊராட்சித்தலைவர் ஊராட்சி உறுப்பினர் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு 4 வாக்குசீட்டுகள் பயன்படுத்தவுள்ளதால் வாக்குசீட்டு முறை எவ்வாறு வாக்குபதிவின் போது நடந்துகொள்ள வேண்டுமென பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏழு இடங்களில் இரண்டாம் கட்டமாக பயிற்சி நடக்கிறது.
இதனை வேலூர் ஊரீசு கல்லூரியில் உள்ள பயிற்சி மையத்தில் தேர்தல் பார்வையாளர் விஜயராஜ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த சிறப்பு பயிற்சிக்காக வேலூர்,இராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.