சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினரை சிறப்பாக கவுரவித்த வேலூர் ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேசிய கொடியினை வழங்கினார்.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளிடம் குறைகள் கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
75 ஆவது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பங்கேற்றனர்.
75 ஆவது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று கௌரவிப்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு தேசிய கொடியினை வழங்கினார் பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் முதல்வர் அறிவுறுத்தலின்படி இந்த தியாகிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. யாராவது விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் வரும் ஆண்டில் இருந்து சிறப்பு செய்யபடும். மாற்றுத்திறனாளி குறைகள் கல்வியில் குறைகள் முன்னுரிமை பெறுதல் பரிந்துரைகள் வேண்டுமென்றால் உதவி செய்வோம். தொழில் செய்ய தியாகிகளின் வாரிகளுக்கு கடன் அளித்து குறைகளை போக்குவோம் என்று பேசினார்.
அப்போது தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு தன்னிடமிருந்த சால்வைகளை அணிவித்து ஆட்சியர் அவர்களை கவுரவப்படுத்தினார்.