கலெக்டர்- எஸ்.பி.யிடம் சிக்கிய கார் திருடர்கள்!

கலெக்டர்- எஸ்.பி.யிடம் சிக்கிய கார் திருடர்கள்!

கு.அசோக்,

ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படுவதை தடுக்க இரவிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநில எல்லையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில மணித்துளிகளில் கார் திருடர்கள் உட்பட பலர் சிக்கினார்கள்.

 வேலூர் மாவட்டம், வேலூர் ஆந்திர எல்லையில் காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான் பேட்டை என்ற தமிழக எல்லை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் இரவில் திடீர் என வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 இதில் ஆந்திராவிலிருந்து வரும் ஆந்திர அரசு பேருந்து தமிழக அரசு பேருந்துகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்தனர்.

 இந்த சோதனையின் போது கார் திருடிச் சென்றவர்கள் பிடிபட்டனர்.

 மேலும் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பேர்ணாம்பட்டு பரதமராமி கிறிஸ்டியான்பேட்டை முத்தரசிகுப்பம்,உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

 போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சோதனை நடத்துமாறு  தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டது.

 பேருந்து நடத்து நர்கள் ஓட்டுநர்களுக்கும் பொருட்கள் எடுத்து வருவதை கண்காணிக்க அறிவுறுத்தபட்டுள்ளது. ரயில்வே போலீசாருடன் தமிழகம் போலீசாரும் சேர்ந்து ஆந்திரா குஜராத் போன்ற தமிழகம் வரும் ரயில்களை சோதனை செய்து தொடர்ந்து கஞ்சாவை பிடித்து வருகின்றனர்.

 விடுமுறை நாட்களான வெள்ளி சனி,ஞாயிறு திங்கள் ஆகிய 4 நாட்கள் முழுமையான சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 மேலும் போதை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஏற்றும் 81 வங்கி கணக்குகள் இம்மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது.