துப்பாக்கியை உடன் வைத்திருங்கள்! லத்தியை ஏன் மறந்தீர்கள்? சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி. அறிவுரை!

ம.பா.கெஜராஜ்,
லத்தியையும் துப்பாக்கியையும் ஏன் மறந்தீர்கள்? துப்பாக்கியை உடன் வைத்திருங்கள், என்று சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி. அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை சீர் செய்யவும் தமிழக அரசால் புதிதாக தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு பிரிவு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி தலைமையில் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வேலூர் சரகத்திற்குட்பட்ட எஸ்பிக்கள், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.
இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த எஸ்பிக்கள் மணிவண்ணன், கார்த்திகேயன், கிரண்சுருதி, ஆல்பர்ட் ஜான் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களில் மாவட்டங்களில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், ரவுடிகளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது குறித்தும், சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பது மற்றும் ஒழிப்பது குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வரப்பெறும் புகார்களை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாம். டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர் திருவண்ணாமலையில் ஆய்வு கூட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:- பிஎஸ்பி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்படார். இந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "காவல் நிலையங்களில் எஸ்ஐக்கள் முதல் டிஎஸ்பி க்கள் வரையிலான அதிகாரிகள் இனி கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்' என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருக்க துப்பாக்கி வைத்துக் கொள்வதைப் பற்றி மேற்படி திருவண்ணாமலையில் நடந்த சட்டம் ஒழுங்கு கூட்டதிலும் பேசினாராம். அதில் லத்தி மற்றும் கைத்துப்பாக்கியை எஸ்.ஐ.க்கள் முதல் டிஎஸ்பி க்கள் வரையிலான அதிகாரிகள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.