பள்ளி கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க கலெக்டர்கள் எஸ்பிகளுடன் ஆலோசனை! காணொளியில் நடத்தினார் தலைமை செயலாளர்!

பள்ளி கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க கலெக்டர்கள் எஸ்பிகளுடன் ஆலோசனை! காணொளியில் நடத்தினார் தலைமை செயலாளர்!

 ம.பா.கெஜராஜ்,

 சில பள்ளி கல்லூரிகளில் நிகழும் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்து கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் தமிழகத்தின் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   

 அடுத்ததாக உத்திரகாண்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பால் கூட்டுறவு சங்க நிர்வாகி மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகளிடம் என்சிசி பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக கூறி என்சிசி ஆசிரியர் பாலியல் துண்புறுத்தல் செய்துள்ளார்.

 ஆகவே இதுபோன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்து கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் தமிழகத்தின் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று மாலை காணொளி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அமலாக்கத்துறை ஏடிஜிபி அமல்ராஜ், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமஷனர் ராதிகா, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஐஜி நஜ்மல்ஹோடா, எஸ்பி உமையாள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து பங்கேற்றனர்.

 இந்த கூட்டத்தில், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது, நடந்தால் அதன் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது, புகார் வந்தவுடன் அலட்சியம் காட்டாமல் உரிய முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது, குற்றச் சம்பவத்தில் ஆவணங்களை அளிப்பதற்கு முன்னர் துரிதமாக நடவடிக்கை எடுப்பது.

 பாகுபாடு காட்டாமல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

 மேலும், பள்ளியில் சிறப்பு கமிட்டிகள் அமைப்பது, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்களிடையே  ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.