தங்கம் வென்ற குடியாத்தம் ஜெயமாருதிக்கு முதல்வர் வாழ்த்து!

 ம.நெல்சன்,

  காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை பெற்றனர்.

  அதில் குடியாத்தம் சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் மூர்த்தியின் மகன் கல்லூரி மாணவர் ஜெய மாருதி காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு நான்கு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

   காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்த வலுதூக்கும் வீரர்களையும் மற்றும்  வலுதூக்கும் சங்க நிர்வாகிகளையும் சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.