சப் கலெக்டர் பங்களாவை பத்திரபதிவு செய்த அதிகாரி சஸ்பெண்டு!
A.Aravind,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சப் கலெக்டர் பங்களாவை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்த பதிவு அலுவலர், 'சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மாதம் ஒரு சொத்து விற்பனை பத்திரம் பதிவானது.
அதன் மதிப்பில் சந்தேகம் வந்ததால், துணை கலெக்டர் ஆய்வுக்கு பரிந்துரைசெய்யப்பட்டது. துணை கலெக்டர் ஆய்வுக்கு சென்ற போது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொத்து, பொதுப் பணித் துறைக்கு சொந்தமான சப் கலெக் - டர் பங்காளா என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, துணை கலெக்டர், பதிவுத் துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அதன் காரணமாக பத்திரத்தை பதிவு செய்த பொறுப்பு சார் பதிவாளர் கதிரவனை, தற்காலிக பணி நீக்கம் செய்து, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.