மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு ஊர்வலம்! ஆட்சியர் துவக்கினார்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் மாசில்லா போகிப்பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார். அதில் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம், வேலூரில் காந்தி சிலை அருகிலிருந்து தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புகையில்லாத போகிப்பண்டிகையை கொண்டாட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், மாசுக்கட்டுபாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பழைய மாநகராட்சியை சென்றடைந்தது,
இதில் டயர் ரப்பர் பொருட்கள் பழைய துணிகள் பிளாஸ்டிக்குகள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு எரிப்பதால் காற்று மாசடைந்து சுற்றுசூழல் பாதிக்கபடுகிறது எனவே புகையில்லா போகியை கொண்டாட மாணவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகம்செய்தனர்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மஞ்சள் பகைகள் வழங்கப்பட்டது.