151 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 26 அளவில் உதவி பணிகள்!

151 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 26 அளவில் உதவி பணிகள்!

 த.நெல்சன்,

  பேரணாம்பட்டு வட்டம், சின்ன தாமல் செருவு ஊராட்சியில்  நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் 151 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 26  லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

   இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமலு விஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு. வெங்கட்ராமன், பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் திருமதி சித்ரா ஜனார்தனன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திருமதி கிருஷ்ணவேணி, பேரணாம்பட்டு ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி லலிதா தேவி, ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி குமாரி, மாவட்ட ஆத்ம குழு தலைவர் திரு.ஜனார்தனன், பேரணாம்பட்டு நகர்மன்ற தலைவர் திருமதி பிரேமா, பேரணாம்பட்டு நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ஆலியா சுபேதார், ஊராட்சி மன்ற தலைவர் திரு. ராஜ மாணிக்கம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திரு.கலியமூர்த்தி, மாவட்ட ஆதிராவிடர் நலத்துறை நல அலுவலர் திரு.ராமச்சந்திரன்மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி சீதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.