கவுன்சிலரை வெளியில் அனுப்புங்கள்! ஏலதாரர்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!!

ஜி.கே.சேகரன்,
கவுன்சிலரை வெளியில் அனுப்புங்கள், ஏலத்தாரர்கள் போலீசாரிடம் வாக்குவாதம், தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகாட் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் நகராட்சியில் முறையற்ற முறையில் நகராட்சி ஏலம் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க நகர செயலாளா,¢ நகராட்சி ஆணையாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில் 2024 மற்றும் 25 முதல் 2026 மற்றும் 27 ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை இனங்களின் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி இன்று நடக்கவிருந்தது. தினசரி காய்கறி மார்க்கெட்டில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிட அறைகளில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை உள்ளிட்ட எட்டு வகையான இனங்களுக்கு குத்தகை உரிமைக்கு ஏலம் விடப்பட இருந்தது.
இந்நிலையில், நகராட்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேரிகாடுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குத்தகை ஏலம் எடுக்க உரிமைக்கோரிய அனைவரும் நகராட்சி அலுவலக வாசலில் காத்திருந்தனர். அப்போது திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்களை மட்டும் நகராட்சி அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஏலத்தாரர்கள் கவுன்சிலர்களை வெளியில் அனுப்புங்கள். அவர்களுக்கு ஏலம் நடக்கும் இடத்தில் என்ன வேலை? என்று போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென்று பேரிகார்டின் மீது ஏறினர். பின்னர் அவர்களை¢ போலீசார் சமரசம் செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க நகர செயலாளர் பைரோஷ் கான் என்பவர் நகராட்சி ஆணையாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.¢ இதனால் பரப்பரப்பு காணப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று நடைபெற இருந்த பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி தற்போது நிர்வாக காரணத்திற்காக தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்படுகிறது மறு ஏழாம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
பின்னர் ஏலம் ஒத்தி வைத்ததை தொடர்ந்து ஏலம் எடுக்க வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.