ஏரி கால்வாயை சீரமைங்க ஆபிசர்!

கு.அசோக்,
சோளிங்கர் அருகே ஏரி கால்வாயை சீரமைக்க கோரி கிராம மக்கள் கோரிக்கை ஏரி நிரம்பாததால் 250 ஏக்கர் விளைநிலம் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரி சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். தற்போது தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்தும் இங்கு நீர்வரத்து கால்வாய் இல்லாத காரணத்தினால் ஏரி நிரம்பவில்லை.
அதன் காரணமாக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஏரியில் தண்ணீர் இருந்தால் வருடத்திற்கு முப்போகம் விவசாயம் செய்வார்கள். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீர் வரும் கால்வாய் தூர்வாரதாதல் தண்ணீர் வரத்து இன்றி எங்கள் நிலங்கள் வானம் பார்த்த பூமியானது.
தற்போது விவசாயிகள் ஒருபோகம் கூட நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஏரி பகுதிக்கு தண்ணீர் வராததால் இந்த வருடம் ஒரு போகம் கூட விளைச்சல் இல்லாமல் பாதித்துள்ளது.
மேற்படி, கூடலூர் ஏரியின் கீழ் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல் கரும்பு வேர்க்கடலை போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் நீருக்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் காத்து தான் வருதாம்.
ஆக, நீர் இல்லாததால் வேதனை அடைந்து வரும் விவசாயிகளின் வாட்டத்தை இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
உடனடியாக கூடலூர் பகுதிக்கு வரவேண்டிய நீர்வரத்து கால்வாயை முறையாக பராமரிப்பு செய்து ஏரிக்கு நீர்வரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.