மின்னொளியில் கபடி போட்டி!

க.ராஜா.
அழகப்பபுரம் புனித ஆன்றனிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 54ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய அளவில் மின்னொளி கபடி போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பாபுரம் புனித ஆன்றனிஸ் தேவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்பகுதி மக்களும் சுற்றுலா சுற்றுவட்டார கிராம மக்களும் வணங்கி வருகின்றனர். இந்நிலையில் அப் பகுதி இளைஞர்கள் புனித ஆன்றனிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 54 ஆண்டுகளாக முன்பு துவங்கி விளையாட்டுப் போட்டிகளும், கிறிஸ்மஸ் குடில் போட்டியும், நியூ இயர் கொண்டாட்டமும் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புனித ஆன்றனிஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான மின்னொளி கபடி போட்டி கடந்த 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று இறுதிக்கட்ட போட்டி 30ஆம் தேதி நடைபெற்றது.
போட்டியில் ஆண்கள் பிரிவில் 17 அணியினரும் பெண்கள் பிரிவில் 12 அணியினரும் கலந்து கொண்டு விளையாடினார்.
இதில் வெற்றி பெற்ற கபடி அணிக்கு ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரெண்டு லட்சமும், சுழல் கோப்பையும் இன்கம் டேக்ஸ்- சென்னை அணியும்,இரண்டாம் பரிசும், சுழற் கோப்பையும் எஸ் வி எம் -ஹரியானா அணியும்,மூன்றாவது பரிசும் ஒரு லட்சம்,சுழற் கோப்பையும் ரெஜோ பிரிண்டர்ஸ்-அழகை அணியும், நான்காவது பரிசும், சுழற் கோப்பையும் ஏ பி பி ஸ்போர்ட்ஸ்-நெல்லை அணியும் பெற்றனர்.
பெஸ்ட் கேட்ச்சர் எஸ் வி எம் ஹரியானா, பெஸ்ட் ரைடர் இன்கம்டேக்ஸ் சென்னை, பெஸ்ட் ஆல் ரவுண்டர் ரிஜோ பிரிண்டர்ஸ்-அழகை அணி வீரர்களுக்கு தலா ஒரு சுமார்ட் டிவி பரிசாக வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு ஒரு லட்சமும், சுழல் கோப்பையும், ஈஸ்ட் ரயில்வே கல்கட்டா அணியும்,இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய், சுழற் கோப்பையும் நார்த் ரயில்வே டெல்லி அணியும், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாய், சுழற் கோப்பையும் பாளையம் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணியும், நான்காம் பரிசு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும் அந்தியூர்-சக்தி பிரதர்ஸ் அணியும் வெற்றி பெற்று பரிசுகளை தட்டி சென்றனர்.
பெஸ்ட் கேச்சர்-நார்த் ரயில்வே, பெஸ்ட் ரைடர் பாளையம் டெல்லி, பெஸ்ட் ஆல் ரவுண்டர் ஈஸ்ட் ரயில்வே அணி வீரர்களுக்கும் தலா ஒரு ஸ்மார்ட் டிவி வழங்கி கௌரவித்தனர்.
விளையாட்டு போட்டிக்கான அரங்கு போட்டி அமைப்பாளர்கள் உயர்தரத்தில் சிறந்த முறையில் செய்து இருந்தனர். இரண்டு புறமும் எல்.இ.டி. திரை, ஸ்டேடியம் போல் இருக்கைகள் மற்றும் கபடி போட்டிகளை உள்நாடு, வெளிநாடு வாழ் அழகை மக்கள் கண்டு கழிக்க யூடுபிலும் நேரடி ஒளிபரப்பு இருந்தனர். கபடி போட்டிகளை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியரங்கில் குவிந்திருந்தனர். அஞ்சுகிராம் போலீசார் சார்பில் பலத்தை போல பாதுகாப்பு போடப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகளை ஏடிஎம் குரூப் ஆஃப் கம்பெனி சேர்மன் ஏ பி எம் செல்வகுமார் டாக்டர் ரவிச்சந்திரன் டி டி என் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் டிடிஎன் லவ்வர் பாலமுருகன் புலி பட தயாரிப்பாளர், டைரக்டர் பிடி செல்வகுமார் செட்டிகுளம் பஞ்சாயத்து பிரசிடெண்ட் எஸ் செல்வகுமாரி மரிய ஜார்ஜ் உட்பட ஸ்பான்சஸ் வழங்கி கௌரவித்தனர்.