அந்த பக்கம் போகாதீங்க:-தண்ணீர் திற்ந்துட்டோம்! இராணிப்பேட்டை ஆட்சியர் அலர்ட்!

அந்த பக்கம் போகாதீங்க:-தண்ணீர் திற்ந்துட்டோம்! இராணிப்பேட்டை ஆட்சியர் அலர்ட்!

  கு.அசோக்,

 வாலாஜா அருகே உள்ள பாலார் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 855 கன அடி நீர் வெளியேற்றம் - பொதுமக்கள் யாரும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட  ஆட்சியர் பேட்டி .

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள பாலார் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 855 கன அடி நீர் வந்துக் கொண்டு இருப்பதால் மகேந்திரவாடி ஏரிக்கு 110 கன அடியும், காவேரிப்பாக்கம் ஏரிக்கு 257 கன அடியும், சக்கரமல்லூர் ஏரிக்கு 136 கன அடியும், தூசி  ஏரிக்கு 352 கன அடி என தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

  எனவே நீர்நிலை கரை ஓரம் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டுமெனவும், நீர் அதிகம் செல்வதால் நீர்நிலைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.