குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டியிலும் சிறுதானியத்தை சேருங்க! பெண் விவசாயிகள் கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் தமிழக அரசு சிறுதானியங்களை விநியோகிக்கவும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியில் சிறுதானியத்தை சேர்க்க பெண் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வேலூர்மாவட்டம்,வேலூரில் களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் மஞ்சுளா மேரி.லோகநாயகி, நான்சி ஆகிய பெண் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில் பெண் விவசாயிகள் சங்கம் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது.
இதில் சிறுதானியங்களான தினை,கேழ்வரகு,பனிவரகு,சாமைகுதிரைவாலி,வரகு,கம்பு,சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை அதிக அளவில் பெண் விவசாயிகள் நாங்கள் ஒருங்கிணைந்து பாரம்பரிய விவசாய முறைகளை கடைபிடித்து இதனை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது சிறுதானிய உற்பத்தியை அதிக அளவு செய்து வருவதால் பொதுமக்களும் பாரம்பரிய முறைக்கு மாறி வருகிறார்கள்.
இந்த பாரம்பரிய உணவை சாப்பிடுவதால் நோய்கள் ஏற்படாது நல்ல உடல் வலிமை ஏற்படும் வாரத்திற்கு 10 வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் முழுமையாக செயல்பட்டு வருகிறோம்.
தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் சிறுதானியங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியிலும் சிறுதானியத்தை சேர்க்க வேண்டும் மேலும் சத்துணவு மாணவர் விடுதிகள் மருத்துவமனைகள் அம்மா உணவகங்கள் சிறைசாலைகள் போன்ற இடங்களில் அரசு உணவு வழங்குவதில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டும் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கவும் உற்பத்தியாகும் சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய முன் வரவேண்டும் கிராம அளவில் உள்ள பஞ்சாயத்துக்களில் தானிய கிடங்குகள் அமைத்து விவசாய பொருட்களை அங்கேயே சேமித்து பராமரித்து பாதுகாப்பாக விநியோகம் செய்ய வேண்டும் இதன் மூலம் சத்தாண கிராம பகுதி மக்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்கள்.