பணம் மேட்டர்:- வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபம்!

ர.நி.ஆனந்தன்,
வாங்காத கடனுக்கு டார்ச்சர் செய்கிறார்கள் எனக் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து நபர்! போலீசார் விசாரணையில் திதிக்கிடும் தகவல்கள் வெளிச்சம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம் மகன் திருப்பதி.
இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வாங்காத கடனுக்கு தன்னை சிலர் மிரட்டுகிறார்கள் எனது வண்டி பிடுங்கி வைத்துக் கொண்டு கோடுக்க மறுக்கிறார்கள், இதன் காரணமாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.
மேலும், குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காவல்துறையினருக்கு வீடியோ ஒன்று பதிவு செய்து அனுப்பியதோடு சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார்.
பின்னர் அவர் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேறிமுத்தூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
இந்த நிலையில் வீடியோவில் குறிப்பிட்டு இருந்த நாட்றம்பள்ளி தாலுக்கா அக்ரஹாரம் ஊசிக்கள் மேடு பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் மற்றும் அவரது மனைவி செல்வி அவருடைய மகன் விக்னேஷ் ஆகியோரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அப்போது திருப்பதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்று இருவரும் சேர்ந்து தாங்கள் ஒரு மின் அலுவலக ஊழியர்கள் என்றும் மேலும் மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தர முடியும் எனக் கூறியும் இருவரும் சேர்ந்து பணம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
அதன் பின்னர் விக்னேஷ்க்கு மின் துறையில் அரசு வேலை கிடைத்து விட்டதாக போலி ஆணை தயார் செய்து விக்னேஷிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த ஆணை போலியானதும் தன்னால் வேலைக்குச் செல்ல முடியாது என தெரிந்த விக்னேஷ் தங்கள் குடும்பத்தினரிடம் கூறிய போது தங்களை ஏமாற்றி விட்டதை அறிந்த குடும்பத்தினர் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
பணம் வாங்கி கொடுத்த திருப்பதியின் வண்டியை பிடுங்கி வைத்துக்கொண்டோம்.
மற்றபடி எந்த மிரட்டலும்ம் நாங்கள் செய்யவில்லை விக்னேஷ் குடும்பத்தினர் ரயில்வே போலீசாரிடம் கூறினர்.
இந்த நிலையில் திருப்பதி மற்றும் அவருடைய கூட்டாளியான மோகன் இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆணை தயார் செய்து வேலைக்காக பணம் கொடுத்த குடும்பத்தை பழிவாங்க வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.