மலை சாலையில் செல்போன் பேசிகொண்டு இறங்கக்கூடாது! வேலூர் கலெக்டர் எச்சரிக்கை!

ஜி.கே.சேகரன்,
மலையிலிருந்து கீழே இறங்குபவர்கள் எச்சரிக்கையாக சாலையில் செல்ல வேண்டும் செல்போன் பேசிகொண்டு கீழே இருசக்கர வாகனத்தில் மலையிலிருந்து இறங்க கூடாது - பீஞ்சமந்தை மலை கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் சாலையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு - கலைஞர் நூற்றாண்டு மருத்துவமுகாமும் நடத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலைகிராமத்தில் சுதந்திரம் பெற்ற நாள் முதலே சாலை வசதில்லை.
இந்நிலையில் தற்போதுள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கி மலைக்கிராம மக்களுக்காக சாலை அமைத்து வருகின்றனர். இந்த பணியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு மருத்துவமுகாம் நடத்தப்பட்டு கர்பினிகளுக்கான விலையில்லா மருத்துவ கிட்டுகள் மற்றும் பல நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று சாலை போடப்பட்டுள்ளது மலையிலிருந்து கீழே இறங்குபவர்கள் எச்சரிக்கையாக சாலையில் செல்ல வேண்டும் செல்போன் பேசிகொண்டு கீழே இருசக்கர வாகனத்தில் மலையிலிருந்து இறங்க கூடாது.
மேலும் இங்கு ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் அங்கன்வாடி மையம் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யபடவுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் நீங்கள் கீழே செல்லலாம் அவசர தேவைகான அனைத்து ஏற்பாடுகளும் அரசு செய்துகொடுக்கும் என பேசினார்
பின்னர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் விழாவில் பேசுகையில் தமிழக முதல்வர் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கேட்டும் போடாத சாலைக்கு தற்போதைய முதல்வர் நிதி ஒதுக்கி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் பீஞ்சமந்தை சாலை கட்டி முடிக்கப்படும் மலையிலிருந்து நீங்கள் கீழே செல்லலாம் மழைகாலத்திற்கு முன்னர் சாலை அமைத்து அது மிகபெரிய அரசு நிகழ்ச்சியாக நடத்தபடும்.
கலைஞர் அரசு மக்களுக்காக சேவை செய்யும், அதிகாரிகள் எல்லா மலை கிராமங்களுக்கும் முதல்வர் அறிவுறுத்தலின் படி சாலையை அமைக்க வேண்டும் என பேசினார்.