சட்டமன்ற குழுவிடம் மனுக்களை அளிக்கலாம்! ஆட்சியர் தகவல்!

ஆர்.ரமேஷ்,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிகுழு வரும் நாளை 07.03.2024 அன்று ஆய்வு செய்ய வருகை தர உள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023- 24 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழி குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.வேல்முருகன் அவர்கள் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நாளை 07.03.2024 அன்று ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளது.
இக்குழுவின் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.வேல்முருகன், குழு உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.அண்ணாதுரை, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.அருள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.டு.கருணாநிதி வானூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.சக்கரபாணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.பழனியாண்டி, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.மணி, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.சு.மனோகரன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மு.மோகன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.டீ.ராமலிங்கம், ஆம்பு+ர் சட்டமன்ற உறுப்பினர் திரு.யு.ஊ.வில்வநாதன், மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். ஜெயக்குமார் ஆகிய 11 குழு உறுப்பினர்கள் இந்த ஆய்வு பயணத்தில் கலந்து கொள்கின்றனர்.
சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஏற்கனவே நிலுவையில் இருந்த உறுதிமொழிகள் சட்டமன்ற பேரவையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட உறுதிமொழிகளின் தற்போதைய நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக காலையில் இருந்து பிற்பகல் வரை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இக்குழு, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு செய்து பார்வையிட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒவ்வொரு உறுதிமொழி மனுக்களின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விரிவாக ஆய்வு செய்ய உள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் திரு.டி.வேல்முருகன் அவர்களிடம் மனுக்களை வழங்கலாம். எனவே, பொதுமக்கள் பொதுவான பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவின் முன்னர் மனுக்களாக வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.