திருக்கோவிலூர் விளாங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும்!

ம.பா.கெஜராஜ்,
முன்னாள் அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற நிலையில், அவர் வென்ற திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேரல் நடத்தவேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டமன்ற செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவிடம் புகார் அளித்தது. அந்த மனுவானது தற்போது தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
அப்படியிருக்க நேற்று திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. அத்துடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மூலம் அதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. இதையடுத்து, விரைவில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
ஏற்கெனவே, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எனவே மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு, திருக்கோவிலூ£ ¢தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.