நாளை பதவியேற்கும் முதல்வர்-துணைமுதல்வர்! இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைத்த டி.கே.சிவக்குமார்!!

ம.பா.கெஜராஜ்,
கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதற்கிடையே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பினர். அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
தனக்கு ஆதரவளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அப்போது டி.கே.சிவகுமார் அருகிலேயே காணப்பட்டார்.
இந்நிலையில் துணை முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவக்குமார் இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார். கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்த இவர் 1980-களில் மாணவர் பருவத்தில் காங்கிரசில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தமது 27 வயதில் 1989-ல் மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வென்றார்.
2008, 2013, 2018 மற்றும் தற்போதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்து இருக்கிறார். கனகபுராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றவர் டி.கே.சிவகுக்மார்.
காங்கிரஸ் மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவர் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்குவது வழக்கம். 2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய பணியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் வீதியில் போராடியவர்.
அடுத்தடுத்த வழக்குகள், விசாரணைகள் என பாஜக அரசு அலைக்கழித்த போது ஒட்டுமொத்த ஒக்கலிகா கவுடா ஜாதியினரும் பெங்களூரு நகரை முற்றுகையிட்டு பிரம்மாண்டமாக நடத்திய பேரணி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த முறை முதல்-மந்திரி பதவிக்காக கேட்டுப்பார்த்து, அது முடியாமல் போகவே முட்டுக்கட்டையாக நிற்காமல் விலகிக் கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு 5 நாட்கள் தேவைப்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்தவர் சிவக்குமார். அந்த அளவுக்கு மிரட்டல் உருட்டல் இல்லாமல் தலைமையின் கைபிடிக்குள் இருந்துக் கொண்டு ஜென்டிலாக பிரச்சனையை டீல் செய்து சர்ச்சைக்கு முடிவுரை எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமைக்கு சித்தராமையா மீது சிவக்குமாரைவிட நம்பகத்தன்மை குறைவுதான்.
ஏன்னா? ஒருவேளை சிவகுமாருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டால், சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் பிளவுபடுத்துவார் என்கிற நம்பத்தகுந்த தகவல் தலைமைக்கு கிடைத்ததே அதற்கு காரணம்.
ராகவே தான் சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டு காம்பரைமைஸ் செய்யப்பட்டது. அவருக்கு மின்சாரத்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அளிப்பதாக தகவல். கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். அதன்பிறகு 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணியில் டி.கே. சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது