தேசிய கல்வி கொளைகையினால் உள்ளூர் மொழியில் பயிலலாம்! ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்து பேச்சு!உறவுக்கு கைகொடுப்போம் - உரிமைக்கு குரல் கொடுப்போம் முதல்வர் ஸ்டாலின்!!

தேசிய கல்வி கொளைகையினால் உள்ளூர் மொழியில் பயிலலாம்! ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்து பேச்சு!உறவுக்கு கைகொடுப்போம் - உரிமைக்கு குரல் கொடுப்போம் முதல்வர் ஸ்டாலின்!!

ம.பா.கெஜராஜ்,

 தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசினார், அப்போது தேசிய கல்வி கொளைகையினால் உள்ளூர் மொழியில் பயிலலாம் என்று குறிப்பிட்டார்.

 இன்று ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

  விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமரை வரவேற்றனர்.

   இந்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வந்தார் பிரதமர் மோடி.

 பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்திற்கு வந்தார்.

   நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர், பல்வேறு கட்டமைப்பு செயல் திட்டங்களை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

   தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெங்களூரு-திருவள்ளூர் பிரிவில் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

 கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

  இதுதவிர, ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம், ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நெரல`ருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,871 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்,  சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

  சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

  மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.724 கோடி செலவில் தனி பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

  நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 11 கட்டமைப்பு செயல்  திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைத்து பேசினார்.

  அப்போது திட்டங்களைக்குறித்து விவரித்த அவர் தேதிய கல்வி கொள்கை என்பது அந்தந்த மாநிலத்திலேயே கல்வி கற்க உதவும் என்று குறிப்பிட்டார்.

  பேச்சின் முடிவில் பாரத் மாதாக்கி ஜே என்றும் வந்தே மாதரம் என்றும் மேடையில் முழங்கினார்.

  முதல்வர் ஸ்டாலினை -தட்டிக்கொடுத்த பிரதமர்

 முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிப் பேசுகையில், நாங்கள் உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார். பின்னர் பிரதமரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தார்.

 தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். சாலை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு காலப்போக்கில் குறைக்கப்படுகிறது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும்.

 நீட் தேர்வை ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கச்சத்தீவை மீட்க இது தான் உகந்த காலம் ஆகவே கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என்றும் பேசினார்.

 முதல்வர் பேசும் போது பல இடங்களில் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டார். அவ்வாறு அவர் ஒன்றிய அரசு என்று  குறிப்பிட்ட போதெல்லாம் நேரு ஸ்டேடியத்தில் கூடியிருந்த திமுகவினர் "ஓ" வென்று கத்தி கைதட்டி ஆர்பரித்தனர்.

 அவர் பேசி முடித்து இருக்கைக்கு திரும்பும் போது முதல்வரை பிரதமர் கைகுலுக்கி பாராட்டியதோடு முதுகை தட்டிக் கொடுத்தார்.

 விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

 தொண்டர்கள் மோதல்?

பிரதமர் மோடி வருகையையொட்டி நேரு விளையாட்டு அரங்கில் திமுக மற்றும் பாஜகவினர் திரண்டிருந்தனர். அப்போது பிரதமர் வாழ்க, மோடி வாழ்க என  பா.ஜ.க.வினர் கோஷம் போட்டனர்.

 அதை பார்த்த திமுகவினர் கருணாநிதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க என பதில் கோஷமிட்டுனர்.

இதனால் நிகழ்ச்சி நடந்த அரங்ககில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

பின்னர் போலிசார் தலையிட்டு ஓரளவுக்கு கட்டுப்படுத்தினர்.