தமிழகத்திலுள்ள 106 மறுவாழ்வுமையங்கள் மாடி வீடுகளாக மாற்றம்! 317 கோடி ரூபாய் செலவு என அமைச்சர் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை பெற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்காக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் - 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு ரூ.317 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கான கட்டுமான பணியை ஆய்வு செய்து சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
வேலூர்மாவட்டம்,மேல்மொனவூரில் இலங்கை தமிழர்கள் முகாம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக அடுக்குமாடி வீடுகள் அமைத்து அதில் 220 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதனை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
பின்னர் அமைச்சர் மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், மான்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் 317 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் அமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார்கள்.
இதன்படி இம்முகாமில் 220 வீடுகள் 55 தொகுப்புகளாக 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. அதனை பார்வையிட்டேன் 6 மாதகாலத்திற்குள் இப்பணிகள் முடியும்.
முதற்கட்டமாக 7 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் வழங்கவுள்ளோம் இது ரூ.317 கோடி வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அடங்கும்.
இலங்கையிலிருந்து வந்த தமிழர்களை தாயுள்ளத்துடன் பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
இலங்கை தமிழர்களுக்கான இந்திய குடியுரிமை பெற முயற்சிகள் நடந்து வருகிறது சட்டமன்றத்திலும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் நாம் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் இலங்கையிலிருந்து இந்தியா வந்து முகாம்களில் உள்ளவர்களிடம் தாய் நாட்டிற்கு மீண்டும் செல்ல விருப்பமா என கருத்து கேட்போம் அதுவரையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது தமிழர்கள் நம் உரிமை என்று கூறினார்.