காவல்துறையினரை தள்ளினர்...தொலைக்காட்சியினரை தாக்கினர்! அதிமுகவினர் மீது புகார்!

ம.பா.கெஜராஜ்,

 முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது  ரி  வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

  அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி  வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதிமுக ஆட்சியில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. அதில் 2011 முதல் 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 கோடி அளவுக்கு அவர் சொத்துக்களை வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

   இதனை மையப்படுத்தி இன்று காலை 6.30 மணியில்  அதிரடி இருந்தே நடந்து ரெய்டு  வருகிறது.

 அதில், வீரமணியின் ஆதரவாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் வீட்டிலும்

சென்னையில் நான்கு இடங்களிலும், மேலும் வேலூர், வெட்டுவானம், சேண்பாக்கம், சத்துவாச்சாரி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள, திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி சோதனையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். (ஏலகிரியிலுள்ள அவரது ஓட்டல் குறித்து தகவல் ஏதும் இல்லை) 

   மேலும், பெங்களூரிலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைநடைபெற்று வருகிறது.

 இந்நிலையில், ஜோலார்பேட்டையில் சோதனை நடக்கும் முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

  இதனால் திணறிய போலிசார் கூடுதலாக ஸ்டெந்த் வரவைத்து ஆர்பாட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் தொண்டர்கள் குவியத் துவங்கினார்கள்.

 தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கையில் கருப்புகொடிகளுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 வீரமணியின் வீட்டிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியேற கோரி காவல்துறையை தள்ளிவிட்டனர்.

 இதனால் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 நேரம் செல்ல செல்ல அதிமுகவினர் அதிகரித்துகொண்டே வந்து முற்றுகையிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வின் வெற்றியை தடுக்கவும், திமுக தோல்வி பயம் காரணமாகவுமோ இந்த லஞ்ச ஒழிப்பு சோதனையை முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவரின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் நடத்துவதாகவும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி.டி.சி.சங்கர் சொன்னார்.

 இந்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியை சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வினர் தாக்கினர்.

   செய்தி எடுக்காதபடிக்கு திட்டமிட்டு தடுத்தனர்.

   இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.