26 அடி உயரமுள்ள மரத்தேர் கிராமத்தில் வெள்ளோட்டம்
ரூபாய் 30 லட்சம் செலவில் புதியதாக செய்யப்பட்ட 26 அடி உயரமுள்ள மரத்தேர் கிராமத்தில் வெள்ளோட்டம் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் வடம் பிடித்து இழுத்தனர்
வேலூர்மாவட்டம்,பொய்கை மோட்டூர் கிராமத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்திற்கு சுமார் ரூ.30 லட்சம் செலவில் 26 அடி உயரமுள்ள மரத்தேர் ஒன்று உருவாக்கப்பட்டது திருவிழா காலத்தில் இந்த பெரிய மரத்தேரில் அம்மன் வீதி உலாவானது நடைபெறும் கடந்த 4 ஆண்டுகளாக செய்யப்பட்ட இந்த மரத்தேர் இன்று கிராமத்தில் வெள்ளோட்டம் (சோதனை தேர் ஓட்டம் )நடைபெற்றது இதில் மேளதாளங்கள் முழங்க இளைஞர்கள் கிராம மக்கள் உற்சாகமாக நடனங்களை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தேரை வடம்பிடித்து இழுத்தனர்