அய்யா பன்றிகளை பிடியுங்களேன் ப்ளீஸ்....

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
அய்யா எங்க ஊர் சாலைகளில் திரியும் பன்றி கூட்டங்களை பிடித்து அப்புறப்படுத்துங்களேன் ப்ளீஸ் என்று பொதுமக்கள் மாநகராட்சி ஆபிசர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ் ஒன் முதல் ஐந்து வரையிலான பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வாக்கிங் அன்ட் ஜாக்கிங் சென்றுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக பேஸ் டூ வில் 46,47,48,59,60,61,ஆகிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து செல்கின்றது.
இங்குள்ள ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருகிறார்களோ இல்லையோ? பன்றிகள் கூட்டமாக விசிட் அடிக்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசுது, வியாதிகள் பரவும் என்பதெல்லாம் மாநகராட்சி அலுவர்களுக்கு தெரியாமல் ஒன்றுமில்லை.
மேற்குறிப்பிட்ட சாலைகள் அனைத்துமே சத்துவாச்சாரியிலுள்ள மாநகராட்சி மணடல அலுவலகத்தின் அருகிலேயே உள்ளது.
இருந்தாலும் இது குறித்து கண்டுகொள்ளப்படவில்லை. என்ன தான் மெத்தனமாக இருந்தாலும் நோய் தொற்று பிராணிகளை நகரில் உலவவிட அனுமதிக்கக்கூடாது அல்லவா.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியான போது, பன்றிகளை காட்டுக்குள் கொண்டு சென்று விட்டதாக மாநராட்சி ஆபிசர்கள் பச்சையாக புளுகினார்கள்.
ஆக இந்த முறை புளுகாமல் பன்றியை அகற்றி மக்கள் பணியில் அக்கறைகாட்டுங்கள்.
அதேபோல் குப்பை, கூலங்களை பார்த்தால் ஊழியர்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது தெரிய வரும்.
சீட்டை விட்டு கிளம்பி வாங்களேன் சார் மக்கள் நலனுக்காக நகர் வலம் வருவோம்.