புது பொலிவு பெறப்போகும் டவுன் ஹால்!

ஜி.கே.அசோக்,
மக்கள் பயன்பாட்டுக்காக வேலூர் டவுன் ஹால் புதிய பொலிவு பெற உள்ளது.
வேலூரில் நகர அரங்கை புதுப்பித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படுகிறது மேலும் சங்கீத சபா இடம் முழுவதையும் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறோம்- ஆட்சியர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான நகர அரங்கம் உள்ளது கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் அதிகாரிகளுடன் இரண்டாவது முறையாக நகர அரங்கையும், பாழடைந்துள்ள சங்கீத சபாவையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அரசுக்கு சொந்தமான நகர அரங்கம் பயன்பாடில்லாமல் உள்ளது இதனை புதுப்பிக்க சொல்லியுள்ளோம்.
குறைந்த வாடகைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் வணிக நோக்கத்திற்கு இது பயன்படாது இதே போல் சங்கீத சபா இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளது.
அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய அரங்கு ஒன்று பெரியதாக கட்டபடும் அதுவும் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரதிட்டமிட்டுள்ளோம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன் இடத்தை முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக கூறினார்.