நாட்டின் முதல் காந்திசிலைக்கு ராணிப்பேட்டை ஆட்சியர் மரியாதை!

நாட்டின் முதல் காந்திசிலைக்கு ராணிப்பேட்டை ஆட்சியர் மரியாதை!

 கு.அசோக்,

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளானது குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 75-வது குடியரசு தின கொடியினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வருகை தந்து கம்பத்தில் இருக்கும் தேசிய கொடியினை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.

  அதனைத் தொடர்ந்து திறந்த வெளி ஜீப் வாகனத்தில் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மரியாதை செலுத்தியதோடு,  காவல் துறையில் சிறந்து விளங்கிய 24 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.

   முன்னதாக நாட்டில் முதன்முறையாக வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 211 அரசு அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் காவல்துறையில் சிறந்து விளங்கிய முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 264 அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

 மேலும் தொழில் வணிகத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறைகளின் 10 லட்சத்து 91 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். பிறகு பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டுப்புற கலைகள் மற்றும் தேசப்பக்தி பாடல்களை நடன ஆடியபடி இந்த குடியரசு தின விழாவை கொண்டாடினார்கள்.