ஊரிசுக் கல்லூரியில் ஊள்ளாட்சி தேர்தல் பயிற்சி! ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்வை!

ஊரிசுக் கல்லூரியில் ஊள்ளாட்சி தேர்தல் பயிற்சி! ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்வை!

 மதன்,

  வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ள முதன்மை வாக்குச் சாவடி அலுவலர் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் ஊரிஸ் கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்றது.

  தேர்தல் பார்வையாளர் திரு.சா.விஜயராஜ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., ஆகியோர் முகாமினை துவக்கி வைத்து அலுவலர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 அப்போது  உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி. ஆர்.ஐஸ்வர்யா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். 

  மேலும் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 7 மையங்களான வேலூர் ஊரிசு கல்லூரி, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கணியம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்தல் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு அலுவலர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

  இம்மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு அலுவலர்களுக்கான தேவைகளை கருதி அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்,