ஜெயேந்திரருக்கு ரிமாண்ட் கொடுத்தவர் அளித்த தீர்ப்பு!   கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் நீதி கிடைத்தது!

murder-case-judgement

ஜெயேந்திரருக்கு ரிமாண்ட் கொடுத்தவர் அளித்த தீர்ப்பு!     கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் நீதி கிடைத்தது!

ம.பா.கெஜராஜ்,

  கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் நீதி கிடைத்துள்ளது, இது ஜெயேந்திரருக்கு ரிமாண்ட் கொடுத்தவர் அளித்த தீர்ப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு தெரிவித்துள்ளார்.

அது பற்றின விவரம் வருமாறு,

முருகேசன் என்ற தலித் வாலிபர், வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து 2003 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

கண்ணகியையும் அவர் கணவர் முருகேசனையும் கொடுமை படுத்தி விஷம் கொடுத்து  படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை

A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை.(இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்)

ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவர். தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

மற்றும், A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர். தற்போது காவல் ஆய்வாளராக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் படுகொலை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.

எனவே குற்றவாளிகளில் 13 பேரும் தண்டனைப் பெற்றுள்ளனர்.

ஒருவன் உயிர் துறக்கிறான்., மற்றவர்கள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள்.

A4 & A9  முருகேசனின் சித்தப்பா ஐயாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோர் மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டதால் விடுதலை.

இந்த பரபரப்பான தீர்ப்பினை வழங்கிய நீதிபதி உத்தமராசா ஏற்கெனவே 12.11.2004. அதிகாலை வெள்ளிக்கிழமையன்று 

காஞ்சிசங்கராச்சாரியாரை சிறைக்கு அனுப்பியவர்.

ஆக தற்போது முருகேசன், கண்ணகி வழக்கில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது.

வழக்கிற்கு உழைத்த அத்தனை வழக்கறிஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுக்களும் என டில்லி பாபு தெரிவித்துள்ளார்.