வசிம் அக்ரம் கொலை வழக்கு:- டீல் இம்தியாஸ் உட்பட ஏழுபேரை காவலில் விசாரிக்க மாஜிஸ்த்திரேட்டு அனுமதி!

வசிம் அக்ரம் கொலை வழக்கு:- டீல் இம்தியாஸ் உட்பட ஏழுபேரை காவலில் விசாரிக்க மாஜிஸ்த்திரேட்டு அனுமதி!

கு.அசோக்,

  வாணியம்பாடி மஜக பிரமுகர் வசிம் அக்ரம் கொலை வழக்கில் வேலூர் மற்றும் சேலம் சிறையில் இருந்த டீல்  இம்தியாஸ் உட்பட 7 பேரை 3 நாள்  காவலில் வைத்து விசாரிக்க வாணியம்பாடி நீதித்துறை நீதிமன்ற நாடுவர் காளிமுத்து வேல் உத்தரவிட்டுள்ளார்.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ம் தேதி  மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6  பேர் வேலூர் மத்திய சிறையிலும், முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வந்தனர்.

  வாணியம்பாடி நகர போலீஸார் குற்றவாளிகளை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏற்கனவே மேற்படி நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

  இதன் அடிப்படையில் இன்று மாலை முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சேலம் சிறையில் இருந்தும்,செல்லா என்கின்ற செல்வகுமார், அஜய், பிரவீன்குமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன் ஆகிய 6 பேர்  வேலூர் மத்திய சிறையில் இருந்து பல்த்த போலீஸ் பாதுகாபுடன் அழைத்து வந்து வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர் படுத்தபட்டனர்.

 அப்போது நீதிமன்ற நடுவர் காளிமுத்து வேல் குற்றவாளிகள் 7 பேர்களையும், 3  நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். பின்னர் 27 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.

  மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கூடிய 7  பேருக்கும் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர்களை துன்புறுத்தாமல் விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டுள்ளது.