நாயுடு சமூக பெண்களை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர் முத்துக்குமரன் மீது மீண்டும் புகார்!

நாயுடு சமூக பெண்களை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர் முத்துக்குமரன் மீது மீண்டும் புகார்!

 ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞருமான முத்துக்குமரன். இவர் மாவட்ட குழு உறுப்பினரின் கணவர் என்கிற ஓதாவில் கல் உடைப்பவர் முதல் கலெக்டர் உள்ளிட்டவர்களை பொது வெளியில் கலாய்த்து வந்தார். இவரது வாய் சவடாலை பரப்புவதற்காக சோஷியல் மீடியாவை தவறாக பயன்படுத்தினர்.

 அதன்விளைவாக தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருக்க அவர் மீது ஒரு சாதி சங்கத்தினர் மீண்டும் புகார் அளித்துள்ளதால் வழக்கறிஞர் முத்துக்குமரனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 கடந்த 22:12:21 அன்று ஆம்பூர் அடுத்த ஆம்பூரை அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் அரசு விழா நடைபெற்றது.

  அந்த விழாவில் மாவட்ட குழு உறுப்பினர் சரிதாவை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அவரது கணவரான முத்துக்குமரன் மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

¢ ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தூண்டுதலின் பேரில் சாதி ரீதியாக எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒதுக்கப்படுவதாக கடந்த ஒரு மாத காலமாக சோஷியல் மீடியாக்களில் அமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன், தேவராஜ்,  மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் உள்ளிட்டோரை விமர்சனம் செய்து வந்தார்.

 மேற்படி வழக்கறிஞர் முத்துக்குமரன் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 20:01:22 அன்று அவர் வெளியிட்ட ஆடியோவானது, வழக்கு, சிறை என்று நீண்டு முத்துகுமரனை கதற வைத்து விட்டது.

  சரி இதோடு தப்பித்தோம் என்று முத்துக்குமரன் தரப்பினரின் தேற்றிக் கொண்ட நிலையில், அவர் மேற்படி வெளியிட்ட ஆடியோவில் நாயுடு பெண்கள் குறித்தும் அந்த சமூகத்தை இழிவாக பேசியும் கொச்சைப்படுத்தியிருந்தார்.

  அந்த ஆடியோ பேச்சை கேட்டவர்கள் இப்படிக் கூடவா ஒரு வழக்கறிஞர் பேசுவார் என்று சளித்துக் கொண்டனர். அப்படி நாயுடு சமூக பெண்களைக் குறித்து அவர் பேசிய பேச்சுக்காக அந்த சாதி சங்கத்தினர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.  

  வழக்கறிஞர் முத்துக்குமரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புகார் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

   இது குறித்து புகார் தாரப்பில் பேசிய பொழுது, எங்கள் புகார் மீது போலிசார்  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயரதிகாரிகளிடம் முறையிடுவோம், தேவை ஏற்பட்டால் கொரோனா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஆர்பாட்டம் நடத்துவோம் என்கிறார்கள்.

   இந்த சமாச்சாரத்திதில் சிறையில் உள்ளவரும் திமுக, அவரால் சாடப்பட்டவர்களும் திமுக என்பது குறிப்பிடத்தக்கது.

   என்னதான் உட்கட்சி மோதல் என்றாலும் வழக்கறிஞர் முத்துக்குமரனின் செயல் அநாகரிகத்தின் உச்சகட்டமாகும்.