தனியாக ஆஸ்பத்திரி நடத்தும் அரசு டாக்டரால் சிறுவன் சாவு!

கே.ஏ.ஜெ.,
ராஜபாளையத்தில் அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப் பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது 6 வயது மகன் கவி தேவநாதன், கடந்த 6ம் தேதி அரசு மருத்துவர் பாஸ்கரன் நடத்திவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனது இறப்புக்கு நீதி கேட்டும் அவனது குடும்பத்திற்கு ?. 25 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.