சாக்லேட்டில் கஞ்சா! 70 லட்சம் மதிப்பில் பிடிபட்டது!

J. அருண் ஹென்றிக்ஸ்,
*துடியலூர் பகுதியில் ரூ.7,00,000/- மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது...*
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப.,* அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (23.02.2023) போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் *தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்* சம்பவ இடமான கோவை சரவணம்பட்டி to துடியலூர் மெயின் ரோடு, ஆறுமுகம் ரைஸ் மில் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த *சங்கர் மஹ்தோ என்பவரது மகன் சந்தன்குமார்* மற்றும் *சந்தஷிர் மஹ்தோ என்பவரது மகன் அங்கித்குமார்* ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து *ரூ.7,00,000/- மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் -1* ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி சிறப்பாக செயல்பட்டு கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.