மலையிலிருந்து மீண்டும் உருண்ட வாகனம்! கையைப்பிசையும் வனத்துறை!

மலையிலிருந்து மீண்டும் உருண்ட வாகனம்! கையைப்பிசையும் வனத்துறை!

G.K.Sekaran,

ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் நிலத்தை உழுது விட்டு வீடு திரும்பிய போது விபரீதம் 15 அடி பள்ளத்தில் டிராக்டர்  கவிழ்ந்து இரண்டு பேர் பலியானார்கள். ஏற்கனவே இந்த மலையில் வாகனம் உருண்டு விழுந்ததில் 11 பெண்கள் பலியான நிலையில் மீண்டும் அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அங்கநாத வலசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி.இவர் ஜவ்வாது மலை புதூர் நாடு மலைபகுதியில் தன்னுடைய டிராக்டரை எடுத்துக் கொண்டு நிலத்தை உழுது விட்டு திரும்பவும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது சித்தூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் தன்னை புதூர் நாடு பகுதியில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டு டிராக்டரில் ஏறி உள்ளார்.இந்நிலையில் சித்தூர் கூட் ரோடு பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்த போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் டிராக்டரின் உரிமையாளர் கோவிந்தசாமி மற்றும் லிப்ட் கேட்டு வந்த  மணி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறை இருவரின் சடலத்தையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் புதூர் நாடு மலை பகுதியில் கோவிலுக்குச் சென்ற பிக்கப் வேண் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இனி மலையில் விபத்து ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று வனத்துறையினர் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறார்கள்.