கணினியில் நில சர்வே! ஆட்சியர் பார்வை!

ர.மதன்,
நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரத்தை கணினியில் பதிவேற்றம் செய்திட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக நில அளவை பிரிவில் கணினியில் புலபடம் வரையும் பணிகள் வரையப்படுவதை ஆட்சியர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது இணை இயக்குநர் (வேளாண்மை) விஸ்வநாதன், குடியாத்தம் வட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.