ரூ.30,00,000/- வரை கல்விக் கடன்! ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல்!

ரூ.30,00,000/- வரை கல்விக் கடன்! ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல்!

R.Ramesh,

 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/- மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.

  கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் தனி நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

 திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு 1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

டாப்செட்கோ கடன் திட்டம்

 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக  பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொதுகால கடன் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கான சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக்கடன், சிறு குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது. 

 இத்திட்டங்களின் கீழ் கடன் பெற  18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.   ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்மே கடன் வழங்கப்படும், ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட இரு திட்டங்களுக்கான லோன் மேளாக்கள், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கீழ்கண்ட நாட்களில் காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

 வ.எண்     வட்டத்தின் பெயர்  லோன் மேளாக்கள் நடத்தப்பட உள்ள நாட்கள்

1        திருப்பத்தூர்   08.08.2023

2        நாட்றம்பள்ளி 09.08.2023

3        வாணியம்பாடி        10.08.2023

4        ஆம்பூர்    11.08.2023

எனவே,  மேற்படி நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,,,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள்.