வேலூர் கோ-ஆப்டெக்ஸிக்கு 14 கோடி இலக்கு! ஆட்சியர் தகவல்!

ஜி.கே.சேகரன்
மழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கோ ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை துவங்கி பின்னர் பேட்டி!
வேலூர்மாவட்டம்,வேலூரில் கன மழையின் காரணமாக பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது இதனை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை மீன் மார்க்கெட் ,மற்றும் பாரதி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தா£,¢ மழைநீரை வெளியேற்றுவது குறித்தும் இதனால் மக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் சாரதி மாளிகையில் உள்ள தீபம் கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்து முதல் விற்பனை துவங்கினார் அதனை வேலூர் மேயர் சுஜாதா பெற்றுகொண்டார் இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் கோ ஆப் டெக்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த ஆண்டு கோ ஆப் டெக்ஸ் ரூ.7 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது தற்போதும் தீபாவளி விற்பனையை தள்ளுபடியுடன் துவங்கியுள்ளோம் மக்கள் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும் இந்த ஆண்டு விற்பனை இலக்கு ரூ.14 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம் நமது மாவட்டத்தில் குடியாத்தம் அருகே மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை எடுக்கிறோம் மழை காலம் என்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதார பணியாளர்களும் மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து டெங்கு புழு ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தும் அதனை சில பள்ளிகள் கடைபிடிக்கவில்லை விளக்கம் கேட்டு அப்பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கபடும் எனவும் இன்று மாலை பேரிடர் மீட்பு குறித்த ஆலோசனை கூட்டமும் நடக்கவுள்ளதாக கூறினார்.