ரூ.55.32 லட்சத்தில் பள்ளிக் கட்டிடம்! அடிக்கல் நாட்டு விழாவில் திருவாரூர் ஆட்சியர்!

ரூ.55.32 லட்சத்தில் பள்ளிக் கட்டிடம்! அடிக்கல் நாட்டு விழாவில் திருவாரூர் ஆட்சியர்!

 க.பாலகுரு,

 அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.55.32 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

  திருவாரூர் மாவட்ட அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில்  1925 சதுர அடி பரப்பளவில் 3 புதிய வகுப்பறைகள் மற்றும் 2 புதிய கழிவறைகளும் அமையப்படவுள்ளது.

 ரூ.55.32 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

 அப்போது, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார். 

  இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், அம்மையப்பன் ஊராட்சி மன்றத்தலைவர் முருகதாஸ், பள்ளி தலைமையாசிரியர் அருளாளன், வட்டாட்சியர்கள் செந்தில் (திருவாரூர்), கார்த்திக் (கூத்தாநல்லூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.